search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்கள் தாமதம்"

    • திருவள்ளூர், அரக்கோணத்துக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் சுமார் அரைமணி நேரம் வரை தாமதமாக புறப்படுகின்றன.
    • கோயம்பேட்டுக்கு சென்று பஸ்சில் சென்றால் பயண நேரம் அதிகம் ஆகும் என்பதால் அவர்கள் மின்சார ரெயில்களையே நம்பியுள்ளனர்.

    சென்னை:

    சென்னை மூர் மார்க்கெட்டில் இருந்து திருவள்ளூர், அரக்கோணத்துக்கு புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    சென்னையில் இருந்து தினமும் ஏராளமான பயணிகள் இந்த ரெயில்களில் பயணம் செய்து வருகிறார்கள். திருவள்ளூர், அரக்கோணம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வேலை நிமித்தமாக சென்னைக்கு வருபவர்கள் இந்த ரெயில்களைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

    இந்த நிலையில் சென்னை மூர் மார்க்கெட்டில் இருந்து திருவள்ளூர், அரக்கோணத்துக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் சுமார் அரைமணி நேரம் வரை தாமதமாக புறப்படுகின்றன. கடந்த ஒரு வாரமாகவே ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

    இதுகுறித்து அவர்கள் ரெயில்வே நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். இந்த பகுதிகளுக்கு சென்ட்ரலில் இருந்து பஸ்கள் இல்லாததால் பயணிகள் மின்சார ரெயில்களையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. கோயம்பேட்டுக்கு சென்று பஸ்சில் சென்றால் பயண நேரம் அதிகம் ஆகும் என்பதால் அவர்கள் மின்சார ரெயில்களையே நம்பியுள்ளனர்.

    ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுவது தொடர்பாக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தாலும் அவர்கள் கண்டு கொள்வதில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'இதற்கு முன்பு இதுபோல பிரச்சனை ஏற்பட்டபோது ரெயில்வே மேலாளரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு புறநகர் விரைவு ரெயில்களை விரைவு வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. புறநகர் மின்சார ரெயில் சேவை தாமதமாக காரணமான பிரச்சனை விரைவில் சரி செய்யப்படும்' என்றார்.

    • மங்களூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் காலதாமதமாக சென்றன.
    • அரசு அலுவலகங்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடும் அவதியடைந்தனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் ரெயில் நிலையம் அருகில் இன்று காலை 10.20 மணி முதல் மதியம் 1.50 மணி வரை சிக்னல் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து இருந்தது.

    இதன் காரணமாக வேலூர் கண்டோன்மெண்டில் இருந்து அரக்கோணம் செல்லும் விரைவு ரெயில், கோவையிலிருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், மைசூரில் இருந்து சென்னை வரை செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ், பெங்களூரில் இருந்து தானாபூர் செல்லும் எக்ஸ்பிரஸ், மங்களூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் காலதாமதமாக சென்றன.

    அதே போன்று காட்பாடி மார்க்கமாக செல்லும் தானாபூர்-பெங்களூர் சூப்பர் பாஸ்ட் ரெயில், சென்னையிலிருந்து ஷீரடி செல்லும் எக்ஸ்பிரஸ், ஹவுரா ரெயில் ஆகியவை காலதாமதமாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் காலை 10.20 மணிக்கு சிக்னல் பராமரிப்பு பணிகள் தொடங்குவதற்கு முன்பாகவே திருவலத்தில் முன்னேற்பாடு பணிகள் தொடங்கியதால் சென்னையில் இருந்து காட்பாடி வழியாக கோவை செல்லும் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரெயில்கள் காலதாமதமாக சென்றன.

    அரசு அலுவலகங்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடும் அவதியடைந்தனர்.

    குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே பராமரிப்பு முன்னேற்பாடு பணிகள் தொடங்கியதாக தகவல் வெளியானது. இது ஏன் என்றும் ரெயில் பயணிகள் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.

    • நெல்லை, தூத்துக்குடி, மதுரை, தென்காசி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
    • பாதையை சீரமைக்கும் வரை ரெயில்கள் நின்றதால் பயணிகள் கடுமையாக அவதிக்குள்ளானார்கள்.

    சென்னை:

    சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தினமும் 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதே போல் அங்கிருந்து எழும்பூருக்கு இயக்கப்படும் ரெயில்களிலும் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகிறார்கள்.

    வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த மார்க்கத்தில் செல்லும் எல்லா ரெயில்களும் முழுஅளவில் நிரம்புவதோடு பொதுப்பெட்டியில் நிற்க முடியாத அளவிற்கு கூட்டம் உள்ளது.

    சென்னைக்கும் தென் மாவட்ட பகுதிகளுக்கும் தினமும் மக்கள் வந்து போய் கொண்டு இருப்பதால் ரெயில்களில் எப்போதும் இடம் கிடைப்பது இல்லை.

    இந்த நிலையில் திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் கடந்த 20-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதனால் திருச்சியில் இருந்து இயக்கப்படும் சில ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

    சில ரெயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படுகின்றன. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இரவில் முக்கிய பணிகள் திருச்சியை ஒட்டிய பொன்மலை நிலையத்தில் நடந்தது. இதே போல் மதுரைக்கு செல்லக்கூடிய பிரிவு பாதையிலும் பணிகள் நடந்தன. இதனால் நள்ளிரவில் சென்னைக்கு வந்த ரெயில்கள் அனைத்தும் பல மணி நேரம் வழியில் நிறுத்தப்பட்டன.

    நெல்லை, தூத்துக்குடி, மதுரை, தென்காசி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    பாதையை சீரமைக்கும் வரை ரெயில்கள் நின்றதால் பயணிகள் கடுமையாக அவதிக்குள்ளானார்கள். நள்ளிரவு நேரமாக இருந்ததால் பயணிகள் தூக்கமின்றி சிரமப்பட்டனர். அதிகாலை 4 மணியளவில் தான் ஒவ்வொரு ரெயிலாக புறப்பட்டு வந்தன. இதனால் எழும்பூர் நிலையத்துக்கு வந்து சேர வேண்டிய ரெயில்கள் அனைத்தும் 4 முதல் 5 மணி நேரம் தாமதமாக வந்தடைந்தன.

    அதிகாலை 5 மணிக்கு வர வேண்டிய ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் 8.30 மணிக்கு வந்து சேர்ந்தது. அதனை தொடர்ந்து நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், பொதிகை, முத்துநகர், அனந்தபுரி, கொல்லம், செந்தூர் மற்றொரு ராமேஸ்வரம் ரெயில் உள்ளிட்டவை வழக்கமாக காலை 6 மணி முதல் 8 மணிக்கு வந்து சேரும்.

    ஆனால் இந்த ரெயில்கள் இன்று 11, 12 மணிக்கே எழும்பூருக்கு வந்து சேர்ந்தன. தென் மாவட்ட ரெயில்கள் தாமதம் ஆனதால் தஞ்சாவூர், சிதம்பரம், கும்பகோணம் வழியாக வரக்கூடிய ரெயில்களும் இனறு வழக்கத்தை விட தாமதமாக வந்தன.

    விடுமுறையில் சென்றவர்கள் இன்று காலையில் வழக்கமான பணிக்கு செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில் ரெயில்கள் தாமதத்தால் பணிக்கு செல்ல முடியவில்லை.

    குழந்தைகளுடன் வந்த பயணிகள் வழக்கமான நேரத்திற்கு வீட்டிற்கு சென்று விடலாம் என திட்டமிட்டனர். ஆனால் பலமணி நேரம் தாமதமாக புறப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். தங்கள் உறவினர்கள், நண்பர்களை அழைத்து செல்ல வந்தவர்கள் எழும்பூர் நிலையத்திற்கு முன்பு காத்து நின்றனர். திருச்சியில் இன்றும் நாளையும் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெறுவதால் காலதாமதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதே போல் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற ரெயில்களும் தென் மாவட்டங்களுக்கு இன்று தாமதமாக சென்றடைந்தன.

    • டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிங்களில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.
    • டெல்லி செல்லும் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றனர்.

    புதுடெல்லி:

    டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிங்களில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் டெல்லி செல்லும் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றனர். சென்னை சென்ட்ரலில் இருந்து புதுடெல்லி செல்லும் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக செல்கிறது.

    இதேபோல் ஐதாராபாத்-புதுடெல்லி ரெயில், பூரி-டெல்லி ரெயில் உள்ளிட்ட 10 ரெயில்கள் 1 மணி முதல் 4 மணிநேரம் வரை தாமதமாக செல்கிறது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லி மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தில் எங்கு பார்த்தாலும் கடும் பனி மூட்டம் காணப்படுகிறது.
    • ரெயில்கள் புறப்படும் நேரம் தொடர்பாக சரியான அறிவிப்பு வெளியிடப்படாததால் பயணிகள் ரெயில் நிலையத்தில் காத்து கிடக்கின்றனர்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லி உள்பட வடமாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். டெல்லி மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தில் எங்கு பார்த்தாலும் கடும் பனி மூட்டம் காணப்படுகிறது.

    இதன் காரணமாக டெல்லி செல்லும் ரெயில்கள் அனைத்தும் தாமதமாக செல்கின்றன. சென்னை சென்ட்ரலில் இருந்து புதுடெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட பல ரெயில்கள் 1 முதல் 8 மணி நேரம் வரை தாமதமாக வரும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    ரெயில்கள் புறப்படும் நேரம் தொடர்பாக சரியான அறிவிப்பு வெளியிடப்படாததால் பயணிகள் ரெயில் நிலையத்தில் காத்து கிடக்கின்றனர்.

    • திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலை 8 மணி வரை எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு நிலவியது.
    • திருவள்ளூர் மார்க்கமாக வரும் அனைத்து விரைவு ரெயில்களும் காலதாமதமாக வருவதாகவும் ரெயில்வே துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை கடும் பனிப்பொழிவுவானது நிலவியது.

    இதில் திருவள்ளூர் ஈக்காடு, புள்ளரம்பாக்கம், திருப்பாச்சூர், கனகம்மாசத்திரம், வேப்பம்பட்டு, அரண்வாயில், மணவாளநகர், ஊத்துக்கோட்டை, திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.

    மேலும் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் காலை முதலே நிலவும் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றனர்.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருப்புப் பாதையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டதால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு ரெயில்கள் மெதுவாக செல்வதால் திருவள்ளூர்- சென்னை மற்றும் சென்னையில் இருந்து திருவள்ளூர் மார்க்கமாக செல்லும் ரெயில்கள் தாமதமாக செல்கின்றன.

    மேலும் திருவள்ளூர் மார்க்கமாக வரும் அனைத்து விரைவு ரெயில்களும் காலதாமதமாக வருவதாகவும் ரெயில்வே துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூர் நோக்கிச் சென்ற அதிவேக வந்தே பாரத் ரெயிலும் முகப்பு விளக்குகளை எரிய விட்டு மெதுவாகச் சென்றது குறிப்பிடத்தக்கது.

    • சிக்னல் பழுதானதால் ரெயில்கள் தாமதமானது.
    • இதனால் வாகன ஓட்டிகள் கடும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் ரயில் நிலையம் அருகே உள்ள திருமங்கலம் விமான நிலைய சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாகும். இதற்கு அடிக்கடி இப்பகுதியில் உள்ள ரயில்வே கேட் மூடப்படுவதால் தினந்தோறும் வாகன ஓட்டிகள் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு திருமங்கலம் ெரயில் நிலையத்திற்கு வந்த சரக்கு ரயில் திருமங்கலம் - மதுரை ரயில் பாதை ஒற்றை வழி பாதை என்பதால் கிராஸ்ங்கிற்காக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 7.50 மணிக்கு சென்னையிலிருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் திருமங்கலம் ெரயில் நிலையம் வந்தடைந்தது.

    ஒரு சில நிமிடம் நின்று விட்டு புறப்பட தயாரான போது ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கேட்டை கேட்கிப்பர் மூடிய போது ஏற்கனவே ஒரு முறை கேட் அடைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றபடி இருந்தது.

    இந்நிலையில் திடீரென கேட் மூடப்படுவதை அறிந்த கார் ஓட்டுநர் பாதையை கடக்க முயன்றபோது ரயில்வே கேட் மீது கார் மோதியதில் கேட் சேதம் அடைந்தது. இதனால் ெரயில்வே கேட் சேதம் அடைந்ததால் சிக்னல் கோளாறு ஏற்பட்டு குருவாயூர் எக்ஸ்பிரஸ் ெரயில் செல்ல முடியாமல் நின்றது.

    இதையடுத்து ெரயில்வே ஊழியர்கள் கேட்டை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படுவதற்காக தற்காலிகமாக கோளாறு சரி செய்யப்பட்டு அரை மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. ஏற்கனவே குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் நான்கு மணி நேரம் தாமதமாக வந்து மீண்டும் அரை மணி நேரம் தாமதமானதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்தநிலையில் கேட் பழுது பார்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் திருமங்கலம் விமான நிலைய சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    ஏற்கனவே அடிக்கடி கேட் மூடப்பட்டு தாமதமாகி வருவதால் மேம்பாலம் கட்ட பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் அரசியல்வாதிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழலில் அடிக்கடி கேட் இதுபோன்று பழுதடைந்து விடுவதாகவும் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    ×